மன்னியும்
தேவா
மன்னியுமே
மன்னியும் தேவா மன்னியுமே
என்னை ஒருவிசை மன்னியுமே
உம்மை விட்டு நானும்
விலகியே நின்றேன்
என்னை மன்னியுமே (2)
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
பொறுமை அன்பு உடையவரே (2)
மனமுடைந்து நான் மடியும் பொழுது
அருகினில் வந்தென்னை அணைப்பவரே – எந்தன்
காயங்கள் ஆற்றிச் செல்பவரே – 2
- மன்னியும் தேவா
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
ஏழ்மை கோலம் எடுத்துவந்தீரே (2)
பாவியான என்னை மீட்க – உமது
உயிரை அன்று தந்தீரைய்யா – நான்
சில நொடியில் அதை மறந்தேன் ஐயா – 2
- மன்னியும் தேவா
வானுக்கும் மண்ணுக்கும் உயர்ந்தவரே ஐயா
உம்மையன்றி வேறு தெய்வம் உண்டோ (2)
உலகம் என்னை வெறுத்த போதும்
உமது நிழலில் தங்கச்செய்தீர்- என்னை
இருகரம் நீட்டி அணைத்துக்கொண்டீர் - 2
- மன்னியும் தேவா